தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
லல்லு..., இப்போது வெளியே

பாட்னா:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிகார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ஜாமினில்விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் 36 நாட்கள் ஜெயிலில்இருந்தார்.

இதையடுத்து இவர் தன்னை ஜெயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஜாமின் மனு போட்டிருந்தார்.

இதற்கான விதிமுறைகளை முடித்துக் கொண்டு ரூ 2 லட்சம் செலுத்தி லல்லு விடுதலையானார்.

1997 ல் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 134 நாட்கள் ஜெயிலிலும், 1998-99 ம் ஆண்டில் இதே வழக்கு தொடர்பாக73 நாட்களும் ஜெயிலில் கழித்தார் லல்லு.

இந்த முறை வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் கடந்த ஏப்ரல் 5 ம் தேதி ஜெயிலில்அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய இவரது மனைவி ராப்ரி தேவிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து லல்லு பிரசாத் யாதவ் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.லால் இந்த விடுதலை உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும் நீதிபதி எஸ்.கே.லால் பிகார் முதலமைச்சர் ராப்ரி தேவி, முன்னாள் முதல்வர் மற்றும் ராப்ரிதேவியின் கணவருமான லல்லு பிரசாத் யாதவ்ஆகியோர் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

அதன்படி மே 22 ம் தேதி இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+