தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சியர்ரா லியோன் அரசை காக்க கடும் நிலை எடுக்கிறது ஐக்கிய நாடுகள் சபை

ஐக்கிய நாடுகள் சபை:

சியர்ரா லியோன் நாட்டில் தீவிரவாதிகளிடமிருந்து அரசைக் காப்போம் என ஐக்கிய நாடுகள் சபைஅறிவித்துள்ளது.

அந் நாட்டின் தலைநகர் பிரீடவுனையும் எந்தப்பாடுபட்டாவது தீவிரவாதிகளிடமிருந்து காப்போம் எனவும்அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் போர் நடந்து வரும் அந் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை படையைஅனுப்பியது. பல்வேறு நாடுகளின் வீரர்கள் அடங்கியது இந்தப் படை. சமீபத்தில் இந்த அமைதிப் படையைச்சேர்ந்த 500 வீரர்களை அதிருப்தி தீவிரவாதப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 35பேரும் அடங்குவர்.

அவர்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கடத்தல்சம்பவத்தையடுத்து அங்குள்ள தனது நாட்டினரை பிரிட்டன் ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்றி வருகிறது.சியர்ரா லியோனுக்கு கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளது.

இந் நிலையில் தான் சியர்ா லியோனில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைஅறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு சியர்ரா லியோனின் நிலைமை குறித்துஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்புப் படை அதிகாரிகள் விளக்கினர்.

அங்கு அமைதி காப்பு என்ற நிலையிலிருந்து அமைதியை திணித்தல் என்ற கடும் நிலைக்கு மாற அமைதி காப்புப்படை திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+