தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழ்நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பயனிக்கும் வகையில் ரூ 6.50 பில்லியன் செலவில் குடிநீர் வழங்கும் திட்டம்அமுல்படுத்தப்போவதாக சட்டசபையில் அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.
சட்டசபையில் உள்ளாட்சி மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடந்தது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கோ.சி.மணி கூறியதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பருவ மழை வரும் வரை குறிப்பாய் சென்னையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். தமிழ்நாட்டில்கோடைகாலத்தில் ஆண்டுதோறும் குடிநீர் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் அளவில் குடிநீருக்காக மட்டும் பல கோடி ரூபாயை தமிழகஅரசு ஒதுக்கியுள்ளது.
சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ரூ 10 கோடி இந்த ஆண்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்2000-2001 ம் ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு அனைத்து விதமான முயற்சியையும் எடுத்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கும், நகர மக்களுக்கும் போதுமான அளவு குடிநீர் வழங்கப்படும்.ராமநாதபுரம்மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் அதிகஅளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அங்கேயும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு லிட்டர் நீர் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் பருவ மழை வரும். அதுவரை மக்கள் தண்ணீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படாதவாறு அரசுகவனித்துக் கொள்ளும். குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உலக வங்கி குடிநீர் விரிவாக்கத் திட்டத்திற்கு நிதிஒதுக்குவதாக அறிவித்துள்ளது. அந்தத்திட்டப்படி நகர்ப்புறங்களில் வாழும் நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்தும்.
தமிழக கிராமப்புறங்களில் சாலைப் பராமரிப்புக்காக தமிழக அரசு ரூ 888 கோடியை ஒதுக்கியுள்ளது. விரையில் இதற்கான வேலைகள் ஆரம்பமாகும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் ரூ 54, 000 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இதற்காகப் பலகோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications