தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ஜெயராம் ரமேசை கர்நாடக மாநில திட்டக் கமிஷன்துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் திட்டமிடல் பிரிவில் மூத்த தலைவராக இருப்பவர் ஜெயராம் ரமேஷ். கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவிலும்இடம் பெற்றிருந்தார். கட்சியின் கொள்கை வகுப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
சமீபத்தில் ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைக்கு ஜெயராம் ரமேஷ் பேட்டி அளித்தார். அதில், அடுத்த 50ஆண்டுகளுக்கு காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாது என்று ரமேஷ் கூறியிருந்ததாகத் தெரிகிறது. மேலும் சோனியா காந்தியையும்அவர் விமர்சித்ததாகத் தெரிகிறது,
இதையடுத்து அவருக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ரமேஷிடம் காங்கிரஸ் தலைமை விளக்கம்கேட்டுள்ளது.
இந் நிலையில் ரமேஷ் மீது கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன்ரமேசுக்கு திட்டக் கமிஷன் பதவி வழங்கப்பட்டது. இப்போது இந்தப் பதவியிலிருந்து விலகிவிடுமாறு ரமேசுக்கு முதல்வர்கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ