செயலை விட அதன் பயனை நேசித்தால்!
இஸ்லாமாபாத்:
ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாரப்புக்கு அதிக அதிகாரங்கள் கொடுப்பதன் மூலம் ராணுவ ஆட்சியாளர்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே மோதல்வெடிக்கும் ஆபத்து உள்ளதாக நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது மறைமுகத் திட்டங்களை வெளிப்படையாக நிறைவேற்ற,இந்த சட்டத் திருத்தங்களையும், வரம்பு மீறிய அதிகாரங்களையும் பயன் படுத்திக் கொள்ள நேரிடும். இதன் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தில் அவர்தலையிடுவது போலாகும்.
மூன்று ஆண்டு காலத்தில் ராணுவ ஆட்சி தனது செயல் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது நாட்டின்பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழ்நிலையை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றார்.
இதற்கிடையே, நவாஸ் ஷெரீப்பின் மனைவியும், கட்சித் தலைவருமான குல்சூம் நவாஸ், முன்னாள் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கின் மகனான இஜாஸுல்ஹக்கின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது அவர் வீட்டில் இல்லை. இருப்பினும், அவரது மனைவி ஷாஜா இஜாஸுல் ஹக்கிடம் அவர் பேசிவிட்டுச்சென்றார்.
இஜாஸுல் ஹக் மீது குல்ஸூம் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற செய்திகளை பொய்யாக்கும் விதமாக குல்ஸூம், ஹக் வீட்டிற்குச் சென்றதாககூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications