தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
யாழ்பாண நகர கவுன்சில் உறுப்பினர் சுட்டுக் கொலை
கொழும்பு:
யாழ்பாண நகர கவுன்சில் உறுப்பினர் சந்தானம் காணடீபன் (வயது 30) நடு ரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை அரசடி அருகே இந்த சம்பவம் நடந்தது. யாழ்பாணத்தில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டைநடந்து வரும் நிலையில் நடக்கும் முதல் அரசியல் கொலை இது. இக் கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் இவர். முன்பு தீவிரவாத அமைப்பாக இருந்த இந்த அமைப்பு பின்னர் தேசிய நீரோட்டத்தில்கலந்துவிட்டது. இந்த அமைப்பினர் இப்போது ராணுவத்துக்கு உதவி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications