கிரிக்கெட் சூதாட்டம்: சிபிஐ விசாரணைக்கு காலவரையறை இல்லை - மத்திய அரசு
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.இதுவரை பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரித்துள்ளது.
இந் நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் சிபிஐ விசாரணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இளைஞர் விவகாரம்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சாவோபா சிங் அளித்த பதில்:
கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பைக் காக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. பல வகைகளில், பல கோணங்களில் சிபிஐ விசாரித்து வருகிறது. ஆனால், விசாரணைக்கு எந்த காலவரையறையும்நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் வெகு விரைவில் விசாரணையை முடிக்கும்படி சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்களை சிபிஐ விசாரிக்கும். எதிர்காலத்தில் இதுபோல் குற்றச்சாட்டுகள் எழாத வகையிலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபடாதவகையிலும் புதிய சட்டம் இயற்றப்படும். இது தொடர்பாக சிபிஐ விசாரணை முடிந்த பிறகு தக்க நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்சாவோபா சிங்.
இதற்கிடையே, கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரிக்கும் சிபிஐ அலுவலகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்ஐ.எஸ். பிந்தாரா, திங்கள்கிழமை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சுமார் 360 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும், தனதுகுற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சில ஆவணங்களையும் அவர் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது அவர் பல குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. சிபிஐ அதிகாரிகளிடம் தான்தெரிவித்த தகவல்கள் குறித்து பதிலளிக்க மறுத்த பிந்த்ரா, 1996-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த கிரிக்கெட் போட்டித் தொடர்கள் மற்றும் அதுதொடர்பான் ஸ்பான்சர்கள் குறித்தும் விசாரிக்கவேண்டும். அப்போதுதான் கிரிக்கெட்டில் நடந்துள்ள ஊழல் வெளியாகும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications