தமிழகத்தில் இன்று
விமானப்படை தாக்குதலையும் மீறி சாவகச்சேரியை நோக்கி புலிகள் முன்னேற்றம்
கொழும்பு:
யாழ்ப்பாணம் நகரை கைப்பற்றும் முயற்சியில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக,இலங்கை ராணுவத்தினருடன் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ளசாவகச்சேரியை நோக்கி அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
சாவகச்சேரியை நோக்கி புலிகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் புலிகளின் கைஓங்கியுள்ளது. சாவகச்சேரியை நோக்கி புலிகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு அங்கு இலங்கைராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். புலிகள் கைப்பற்றிய தானாங்கிளப்புப் பகுதியில்இருந்த இலங்கை ராணுவத்தினர் தற்போது சாவகச்சேரியை நோக்கி அனுப்பப்படுகின்றனர்.
இதற்கிடையே, நாகர்கோயிலில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது புலிகள் கடுமையான குண்டுவீச்சுநடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.
இந் நிலையில், யாழ்ப்பாணம் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக செல்லும்படி புலிகள்தங்கள் வானொலிச் செய்தி மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர். சாவகச்சேரி நகரம், மட்டுவில், கிலாலி, கச்சைபகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் மேற்கொண்டு தங்களிடமிருந்து தகவல் வரும் வரை தற்போது இருக்கும்இடத்திலேயே இருக்கும்படி புலிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப் படை தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக சிறிது அமைதி நிலவியது. இரு தரப்பிலும் அவ்வளவாக துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை.புலிகள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டதே அதற்குக் காரணம் என அரசு கூறுகிறது.
ஆனால், செவ்வாய்க்கிழமை புலிகள் மீண்டும் கடும் தாக்குதலில் இறங்கினர். இதில் ஒரு அதிகாரி உள்பட 6ராணுவ வீரர்கள் இறந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, இலங்கை இனப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது என நார்வே அறிவித்துள்ளது.இந்தப் பிரச்சனை நீண்ட காலம் தொடரும். இதற்காக நாங்கள் எங்கள் முயற்சியிலிருந்து பின் வாங்க மாட்டோம்.தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வோம் என நார்வே அறிவித்துள்ளது.