கிரிக்கெட் சூதாட்டம்: பிந்த்ராவிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
கே: நாங்கள் மண்ணுக்கேற்ற மார்க்சிஸத்தை பின்பற்றுகிறோம். கம்யூனிஸ்ட்கள்சீட்டுக்கு ஏற்ற மார்க்சிஸத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று ராமதாஸ்கூறியுள்ளாரே?
ப: சரி. ஆக மொத்தம் , யாருமே மனிதர்களுக்கேற்ற மார்க்சிஸத்தைப்பின்பற்றுவதில்லை என்பது புரிகிறதது.
கே: அ.தி.மு.க. சொத்துக்களை விற்க ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம்வழங்கப்பட்டுள்ளதே?
ப: இதற்கு அதிகாரமே தேவை இல்லையே! அ.தி.மு.க.வின் மிகப் பெரிய சொத்து -எம்.ஜி.ஆர். ஓட்டு. அதில் ஒரு பங்கை ஏற்கனவே ஜெயலலிதா விற்று விட்டாரே?
கே: பெண்கள் பெரும்பாலும் கள்ள ஓட்டு போடுவதில்லை, இதிலிருந்துபெண்களின் நல்ல குணம் தெரிகிறதா?
ப: இன்னொரு பெண்களின் ஓட்டை நாம் போட்டால், அந்தப் பெண்ணின் வேலையைநாம் செய்த மாதிரி ஆகி விடுமே? நாம் ஏன் மற்றொரு பெண்ணுக்கு இப்படி உதவவேண்டும்? வேண்டுமென்றால் அந்தப் பெண்ணே வந்து ஓட்டுப் போட்டுக்கொள்ளட்டுமே? என்று பெண்கள் நினைக்கிறார்களோ என்னவோ?
கே: தமிழக அரசியல் போக்கில் தங்களுக்கு ஆறுதல் தரும் விஷயம் எது?
ப: வாழப்பாடி; த.மா.கா; கம்யூனிஸ்ட்கள் போன்ற சிலர் விடுதலைப் புலிவிவகாரத்தில் எடுக்கிற நிலை.
கே: காந்தியடிகள் 20-ஆம் நூற்றாண்டின் மகாத்மா, கலைஞர் 21-ஆம்நூற்றாண்டின் மகாத்மா என்று அமைச்சர் ஆலடி அருணா ஒப்பிட்டுப்பேசியுள்ளது பற்றி...?
ப: அப்பா! அடேயப்பா! நூறே ஆண்டுகளில் காலத்தின் கோலம்தான் என்னே! கலிஇவ்வளவு சீக்கிரம் முற்றி வருகிறதா? அப்படியா அமைச்சர் நினைக்கிறார்!ஆச்சர்யமாக இருக்கிறது.
கே: முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகளுக்கு ஊழல்வழக்கில் தண்டனை வழங்கப் பட்டுள்ளதே?
பச இந்தத் தீர்ப்பை முழுமையாகப் படிக்கிற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு தகப்பனார்,தன் மகள் பெயரில் சொத்து வாங்கினால், அந்த மகள் அதற்கு எப்படி பொறுப்பாவார்- என்பது எனக்கு விளங்கவில்லை. இந்த சொத்தை எப்படி வாங்கினீர்கள்? ஒழுங்கானபணத்திலா, அல்லது மோசடியா? என்று எந்த மகளாவது கேட்பாரா? முன்னாள்சபாநாயகர் மகள் மீது என்ன குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.தண்டனை கடுமையானது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
கே: நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படிஇருக்கிறது?
ப: நெஞ்சைத் தொட்டுக்கொண்டு விட்டேன். திக்திக் என்று அடித்துக் கொள்கிறது.சட்டம் - ஒழுங்கு அப்படித்தான் இருக்கிறது. திக்திக்!
கே: தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் எப்படி இருக்கும்?
ப:இதைக் கற்பனை செய்து பார்ப்பானேன்? அனுபவித்தே பார்த்துவிடும் வாய்ப்புநமக்குக் கிடைக்கக் கூடும். விடுதலைப் புலிகள், தமிழக அரசியல் கட்சி ஆகியவற்றின்கூட்டணி ஆட்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு தொலைவில் தெரிகிறது.
கே: நம்நாடு பெண் பிரதமர், பெண் கவர்னர், பெண் முதலமைச்சர்களைக் கண்டநாடு. இருந்தும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தாங்கள்விரும்பவில்லையே ஏன்?
ப:அதுதான் அனுபவம் ஸார், அனுபவம்.
கே: தீடீரென்று ஒரு நாள் காலை நீங்கள் தூங்கி எழுந்திருக்கும்போது, உலகில்உள்ள பெண்கள் அனைவரும் காணாமல் போய், ஆண்கள் மட்டுமே இருந்தால்உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
ப: ஐயைய்யோ! எழுந்தவுடன் காபி குடித்ததாக வேண்டுமே? என்ன செய்வது?
கே: அ.தி.மு.க. விலிருந்து விலகி, தி.மு,க,. வில் இணைந்தவர்களை கனிந்தபழம் என்று கருணாநிதியும்; அழுகிய பழங்களைத்தான் தூக்கி எறிந்தேன் என்றுஜெயலலிதாவும் - விமர்சனம் செய்துள்ளது பற்றி...?
ப: ஆக மொத்தம் - பழம், பழத்தின் எதிர்காலம் என்ன? ஒன்று ஜூஸ் ஆகபிழியப்படலாம்; அல்லது - வெட்டியோ,கடித்தோ சாப்பிடலாம்; அதுவும்இல்லையென்றால் தூக்கி எறியப்படலாம். இதில் ஒன்றுதான் இவர்களுடையஎதிர்காலமா? பாவம்.
கே: மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டுவிட்டதாமே?
ப: அதனால் என்ன? நாலாவது அணி அமைக்க முனையலாமே! எல்லாம் ஒருபொழுதுபோக்குதானே!
கே: மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் தர முன்வந்தது கபில்தேவ்தான் என்றுமுன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர் பிந்தரா கூறியுள்ள குற்றச்சாட்டுகுறித்து...?
ப: பொய்யா, நிஜமா என்பது புரியவில்லை. டெண்டுல்கர் பெயரும் அடிபடுகிறது.உண்மையான விசாரணைஒன்று, ஒழுங்காக நடந்து முடியுமா -என்பதும்தெரியவில்லை. எல்லோருமே சந்தேகத்திகுரியவர்கள் தான் என்ற நிலைவந்து விட்டால் இவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்தியா எப்படி கிரிக்கெட்மாட்சுகளுக்கு டீமைத் தேர்ந்தெடுப்பது? என்ற கேள்வி எழும்.அப்போது எல்லாமேபூசி மெழுகப்பட்டு விடலாம். ஆகையால் உண்மை வெளி வருமா, புதைக்கப்பட்டுவிடுமா என்பதும் புரியவில்லை.
கே: நீங்கள் துக்ளக்கை ஆரம்பிப்பதற்கு முன், உங்களை மற்ற பத்திரிக்கைகளில்எழுத ஊக்குவித்தவர்கள் யார்?
ப: சாவி, கல்கி ராஜேந்திரன், தமிழ்வாணன், ஆர்.வி., அழ. வள்ளியப்பா. இதில்நகைச்சுவை நாவல்கள் எழுத ராஜேந்திரன் அளித்த ஊக்கமும், அரசியல் கட்டுரைகள்எழுத சாவி அளித்த ஊக்கமும், துக்ளக்கில் எனக்கு மிகவும் உதவியது என்றுநினைக்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications