தமிழகத்தில் இன்று
சென்னை:
வீரப்பனைப் பிடிக்கத் தமிழக அரசு இதுவரை ரூ 4 கோடியே 54 லட்சம் செலவிட்டுள்ளது என்று தமிழக முதல்வர்கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு நாடுகளின் பிரச்சனையாக உள்ளது.இந்த நிலையில் தமிழ்நாடு வீரப்பனைப் பிடிப்பதற்காக இதுவரை ரூ 4 கோடியே 54 லட்சம் செலவிட்டுள்ளது.
கர்நாடகா அதைவிட இன்னும் அதிகமாக செலவிட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
நண்பனைப் பார்க்க வந்தான் வீரப்பன்:
இந்த நிலையில் நெருப்பூரில் ஜெயிலிலிருந்து விடுதலையான தனது நண்பனைப் பார்க்க வீரப்பன் வந்தான் என்றுபோலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.
சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் மிகப்பெரியதலைவலியாக இருப்பவன். இவனைப் பிடிக்க கூட்டுஅதிரடிப்படை போலீசார் தீவிர வேட்டையாடி வருகிறார்கள்.அந்தியூர், பண்டிப்பூர் என்று ஆங்காங்கே ஓடித் திரிந்து கொண்டு போலீசாருக்கு பல்லாண்டுகாலமாக பிரச்சனைகொடுத்து வருபவன் இவன்.
இவனது நண்பன் பழனிச்சாமி. இவன் நெருப்பூரைச் சேர்ந்தவன். வன அதிகாரிகள் கடத்தல் வழக்கில்தொடர்புடைய இவன் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அங்கிருந்து விடுதலையாகிய இவனைவீரப்பன் நேரில் சென்று சந்தித்தான் என்று போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவன் நெரூப்பூரில் எங்கு சென்று பழனிச்சாமியைச் சந்தித்தான்? பழனிச்சாமி தற்போது எங்குள்ளான் போன்றதகவல்கள் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications