தமிழகத்தில் இன்று
சென்னை:
தேயிலைத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தேயிலை விலையை கிலோவுக்கு ரூ 15 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், தேயிலை இறக்குமதியை தடை செய்யக் கோரியும் நீலகிரி மாவட்டத்தில்தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டம் காரணமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளது
கடந்த திங்கள்கிழமை 10, 000 க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிலாளர்கள் ஊட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுற்றுலாப்பயணிகளைவரவிடாமல் தடுத்தார்கள். ஏலன்ஹள்ளி, தொட்டபெட்டா, கோத்தகிரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வரை அவர்கள் சாலை மறியில்ஈடுபட்டார்கள்.
இதனால் குன்னூர், கோத்தகிரி, தொட்டநாடு பகுதிகளில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகளின் பஸ்கள் அங்கு வராதவாறு அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பஸ்கள் மீது கல் வீச்சும் நடத்தப்பட்டது. போலீஸ் நிலையத்தைச் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அனைத்துக் கட்சிக்குழு:
இந்த நிலையில், தேயிலைத் தொழிலாளர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், பிரச்சினையை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு அனைத்துக் கட்சிக் குழு ஒன்றைஅமைக்கும். தேயிலை மீது விதிக்கப்பட்டிருந்த விற்பனை வரியை 4 சதவீதம் குறைப்பதற்கும் அக்குழு கலந்தாலோசித்து முடிவெடுக்கும்.
டீ தூளுக்கு கிலோவுக்கு ரூ. 5 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இறக்குமதி மீதான 35 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. விரைவில் நடக்க இருக்கும் அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications