தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
கைது செய்யப்பட்ட நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் அனைவரும் சனிக்கிழமை இரவு விடுதலைசெய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிரிட்டு வரும் சிறு விவசாயிகள் தேயிலைக்கு ஆதார விலை கோரி போராட்டம்நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக சனிக்கிழமை சாலைமறியல், பஸ்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. 25 பஸ்கள்அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு தீயணைப்பு வண்டியும் இதில் சேதமடைந்தது.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கக் கோரிசனிக்கிழமை எல்லநள்ளி என்ற இடத்தில் சாலை மறியல் நடந்தது. 2 ஆயிரம் பேர் இந்த வேலை மறியலில்ஈடுபட்ட போது மத்திய பொதுத்துறை அமைச்சர் மனோகர்ஜோஷி அந்த வழியாய்ச் செல்ல வேண்டியிருந்தது.
இதனால் அங்கு போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் பதட்டம் உருவானது. பின்னர் அதிகாரிகளும்,எம்எல்ஏ எம்பி ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்தனர்.
நீலகிரியில் கைது செய்யப்பட்டு கோவை அருகே உள்ல கவுண்டம்பாளையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளஇரண்டாயிரம் விவசாயிகளை விடுவிக்க சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட அனைவரும சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.