நிகழ் காலத்தில் நில்!
கூடுதல்ஆகும். எண்ண அதிர்வுகள் விரைவு படுவதால் தானும் எரிச்சல் பட்டு பலரை எரிச்சல்படுத்தும் இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
நூற்றுக்கு நூறு வெற்றியாக ஒரு காரியத்தைச் செய்கிறவர் நூற்றுக்கு நூறு அந்தக்காரியத்தில் மூழ்கி இருப்பார் என்பது உண்மை.
ஒரு டீ குடித்தால் அதன் மணம், திடம், நிறம் மூன்றையும் அனுபவிக்க வேண்டாமா?அந்த டீ தயாரித்தவர் நம் பொருட்டு மேற்கொண்ட முயற்சி, உழைப்பு, அக்கறை,பொருட்செலவு இவற்றை எண்ணி நன்றி பாராட்ட வேண்டாமா?
தபால் பெட்டியில் கடிதங்கள் போடுகிற பாணியில் பரபரப்பாக டீ குடித்துவிட்டு பஸ்பிடிக்கிற அவசரத்தில் ஓடுவது வாழ்க்கை ஆகுமா? எப்போதும் இப்படி எதிர்காலத்தில்இருப்பவர்கள் நிகழ்காலத்தைக் கொன்று விடுகிறார்கள். இவர்களுக்கு நிகழ்காலம்என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுகிறது.
ஞானம் பெற்ற புத்தர் ஒருவர் தம் சீடர்களைக் கேட்டார். ஒரு மனிதனின் நிச்சயமானஆயுள் எவ்வளவு.?
ஒரு சீடன் ( கொஞ்-சம் மூடன்) ஐம்பது என்றான். இன்னொருவன் அறுபதுஎன்றான்.அவரவர் சில வருடங்களை உளறியதும் குரு சொன்னார். ""நிச்சயமாய் நமதுஆயுள் இப்போது விடும் ஒரு மூச்சு"" என்றார். நமது இந்த சுவாசம்தான் நிச்சயம்.எனவே இதை அழகுபட உணர்வு பூர்வமாய் அனுபவித்துக் கொள்ள வேண்டியது நம்கடமை.
எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை உணர்வு அவசியம். ஆனால் நிகழ்காலம்தான்உண்மையான வாழ்வு என்று புரிந்து கொள்ள வேண்டும். ""தூங்கையிலே வாங்குகிறமூச்சு ... ஒரு சுழிமாறி போனாலும் போச்சு"" என்பது பழைய பாடல்.












Click it and Unblock the Notifications