நிகழ் காலத்தில் நில்!

Subscribe to Oneindia Tamil

நமது மூக்கிலிருந்து பிரிந்த சுவாசம் மீண்டும் ஞாபமாக நமது மூக்கிற்கே வந்தால்தான்உயிர்வாழ முடியும். அது வழிதவறி வேறு மூக்கு தேடினால் கதை கந்தலாகி விடும்.எனவே இந்த மூச்சு தான் உத்தரவாதம். சாசுவதம். அதில் வாழ்வது முக்கியம்.

""செயலைச் செய்.செயலைச் செயலுக்காகச் செய். செயலில் ஒன்றிச் செய்"" என்கிறகீதையின் சாரம் நிகழ்காலத்தில் இருத்தலைப் புரிய வைக்கிறது.

இரவு பத்துமணிக்கு மேல் ஒரு கிராமத்தில் எனக்கு பகவத்கீதை சொற்பொழிவு...எதிரே இருந்த நபர் நன்கு சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கி வழிந்தார். சாமியாடி.தேவலோகம் , பிதுர்லோகம் கனவுகளால் பயணித்து திடீர் என்று ஓர் உலுப்பு உலுப்பிவிழிப்பார்.

தாம் தூங்கியதை பக்கத்து நபர் பார்த்த அவமானம் தீர அவரைப் பார்த்துச் சிரித்தார்.பிரேத களையில் இவர் சிரித்ததில் அவர் பயந்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

உடனே திருவாளர் தூக்கம், சொற்பொழிவு செய்யும் என்னை முறைக்க எனக்குவருத்தமாகி விட்டது. அந்-த சாமியாடி தூக்கம் அவர்கள், பாதி தூங்கி பாதி விழித்துப்பாடாய்ப்படுத்தினார். அவர், என் கூட்டத்தில் தூங்கியதில் எனக்கு வருத்தமேயில்லை.பாவம்.. அவருக்கு வீட்டில் வராத தூக்கம் சொற்பொழிவில் வந்தால் நிம்மதியாக நான்தூங்கவிடத் தயார்.

என் நிலை இதுதான்.. ""நீ ஏன் என் சொற்பொழிவில் தூங்கினாய்"" என்று கேட்கமாட்டேன். ""இடை இடையே ஏன் விழித்தாய்"" இதுதான் என் கேள்வி.

குற்ற உணர்வு காரணமாக ஆனந்தமான தூக்கத்தை நன்கு அனுபவிக்காமல் அறுத்துக்கொள்வது அவசியம் தானா? ""எதைச் செய்கிறாயோ அதில் பூரணமாக இரு""!என்கிறேன் தவறா?

ஸ்ரீமான் தூக்கம் அவர்கள் என்னைப் பாடாய்ப்படுத்திய பிறகு வீட்டுக்குப் போனதும்நிம்மதியாகத் தூங்கலாம் அல்லவா? அதுதான் இல்லை! ஏன்? பிறகு சொல்கிறேன்.

முதல் பக்-கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+