தமிழகத்தில் இன்று
ஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு
டெல்லி:
ஏர்-இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலீட்டைத் திரும்பப் பெறுவதுதொடர்பான அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு, முதலீட்டைத்திரும்பப் பெறும் துறையின் அமைச்சர் அருண் ஜேட்லி, நிருபர்களிடம் கூறியதாவது:
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவுசெய்தது. அது தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் இறுதி முடிவுஎடுக்கப்பட்டது.
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை மத்திய அரசே வைத்துக் கொள்ளும். மீதமுள்ள 60சதவீத பங்குகள் வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிதி அமைப்புகளும், தனியார்களுக்கும், ஏர் இந்தியாநிறுவன ஊழியர்களுக்கும் விற்கப்படும்.
தனியார் அமைப்புகளுக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ள 60 சதவீத பங்குகளில், 40 சதவீதம் வெளிநாட்டுவிமான நிறுவனங்களுக்கு விற்கப்படும். 10 சதவீதம் உள்நாட்டு நிதி நிறுவனங்களுக்கும், மீதமுள்ள 10 சதவீதபங்குகள் ஏர் இந்தியா ஊழியர்களுக்கும் விற்கப்படும்.
மத்திய அரசின் இந் நடவடிக்கையின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக தனியார்மயமாக்கப்படாது.மேலும் அந் நிறுவனத்தின் 74 சதவீத கட்டுப்பாட்டு இந்தியர்களிடம்தான் இருக்கும்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பது தொடர்பாக மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவுஎடுக்கவில்லை. முதலீட்டைத் திரும்பப் பெறுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட கமிஷனின் பரிந்துரையின்படிதான்இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்கவே இந்த முடிவைமத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 60 சதவீத பங்குகளை விற்க கால இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லைஎன்றார் அருண் ஜேட்லி.
யு.என்.ஐ.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications