- ஹேமங் பதானி
கே: பாராளுமன்றத்தில் கூட இல்லாத ஜனநாயகம், தமிழக சட்டசபையில்தான் தழைத்தோங்குகிறது -என்ற அமைச்சர் அன்பழகனின் பெருமிதம் குறித்து...?
ப: தமிழக சட்டசபை , பெரும்பாலும் இந்த ஆட்சியின் போது, நன்றாகவே செயல் பட்டிருக்கிறது என்பதில்சந்தேமில்லை. பாராளுமன்றத்தில் உள்ள கட்டுப்பாடின்மையும் , ரகளையும் - இங்கு இல்லை; அதே சமயத்தில்எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் தாராளமாகவே கிடைக்கின்றன. அன்பழகன் பெருமைப்பட்டுக் கொள்வதில்நியாயம் இருக்கிறது.
கே: சூரியன்ைப் போல இறப்பு என்பதே இல்லாததுதான் கம்யூனிஸம் என்று ஈ.கே.நாயனார்கூறியுள்ளாரே?
ப: தகித்து பொசுக்குபவை எல்லாம் சூரியன் அல்ல.
கே: கிருஷ்ணா நதிநீரைக் கண்ணில் மட்டும கண்டீரா? சுவைத்தும் பார்த்து விட்டீரா?
ப: கண்டேன்! சுவைத்தேன்! பின்னர் கனவிலிருந்து விழித்தேன்.
கே:பாகிஸ்தானில் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனநாயகம் மீண்டும் கொண்டு வரப்படும் - என்றுஅந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது பற்றி?
ப: உலகிலேயே வாய்தா பெற்றுள்ள ஜனநாயகம் - பாகிஸ்தானில் மட்டும்தான் காணக் கிடைக்கக் கூடிய அதிசயம்.
கே: நான் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. கட்டிய பாலங்களை இடித்தெறிவேன் - என்கிறாரேஜெயலலிதா?
ப: ஜெயலலிதாவிடம் உருப்படியான வேலை வாய்ப்பு அதிகரிப்பு திட்டம் எதுவும் இல்லை என்று இனி யாரும்சொல்ல முடியாது. அது சரி இடி காண்ட்ராக்ட் யாருக்கு?
கே: சென்னைக்கு வருவது கிருஷணா நீரா, இல்லையா? இதில் உள்ள மர்மம்தான் என்ன?
ப: ஆக, நீர் வருகிறது என்று நாம் எல்லாரும் ஒப்புக்கொண்டு விட்டோம்! இதுவே, ஆட்சியின் சாதனைதானே!
கே: ஜூலையில் நடத்த உள்ள மாநாட்டிற்குப் பிறகு, அரசியலில் நல்ல திருப்பம் ஏற்படும் - என வைகோகூறியுள்ளது பற்றி?
ப: எப்படி? ம.தி.மு.க. வை கலைத்து விடும் முடிவு அந்த மாநாட்டில் அறிவிக்கப்படுமா? நான் நம்பவில்லை.
கே: கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சீங் சுர்ஜீத்தை திருப்பதிப்படுத்த ஏதாவது கூறுங்களேன்?
ப: ஏதாவது குழப்பம் வரும்.
கே: அமிர்தலிங்கம் , பத்மனாபா... போன்ற சில தலைவர்களின் கொலைகளுக்குப் பிறகு நான்விடுதலைப் புலிகளை ஆதரிவிக்கவே இல்லை - என்று கருணாநிதி கூறியுள்ளாரே?
ப: பழைய பேப்பர்களை எல்லாம் நாம் விற்று விடுகிறோம் - என்கிற தைரியம் அவருக்கு!
கே: சுத்திரிகரிக்கப்பட்ட தண்ணீரை அடுத்து, சுத்த சுவாசக் காற்றும் விற்பனைக்கு வந்துள்ளதே! இதுபற்றி உங்கள் கருத்து?
ப: இது உயர்ந்த தத்துவம், காற்று எப்படிப்பட்டது? "நமஸ்தே வாயோ! த்வமேவ ப்ரத்யஷம் ப்ரம்ஹம்மாஸி"!அதாவது, காற்றே ! உன்னை நமஸ்கரிக்கிறேன். நீயே ப்ரத்யட்ஷமான ப்ரம்மம்! என்று அர்த்தம்.இன்று பணம்தானே ப்ரம்மம்! காற்று, பணமாகிறது! நமஸ்தே வாயோ! த்வமேவ ப்ரிதயஷம் ப்ரஹ்ம்மாஸி!
கே: வருங்காலத்தில் சிம்பன்ஸி குரங்குகள் பேச ஆரம்பிக்கும் - என விஞ்ஞானிகள் கூறுவது பற்றிதங்கள் கருத்து?
ப: இது என்ன புது விஷயம்? ஏற்கனவே பேசிக் கொண்டுதானே இருக்கிறோம்?
கே: தாங்கள் பெண்ணைக் கிண்டல் செய்து, ஆண்தளை உயர்த்துப் பேசுவதால் தங்களுக்கு "ஆண்கள்மானம் காத்த ஆடவர் திலகம்" என்ற பட்டம் சூட்டி விடுகிறோம்.அபபொழுதாவது எங்களைக் குறைகூறுவதை நிறுத்துவீர்களா?
ப: என்னைக் கெளரவப்படுத்தவும் துணிந்து விட்டீர்களா? ஆண்களின் வாயை அடைத்துவிட, நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்து விடுவீர்கள் என்கிற என் எண்ணம் உறுதிப்படுகிறது.
கே: திருப்தி, ஆத்ம திருப்தி. இதற்கு என்ன விளக்கம்?
ப: என் காரியம் ஒழுங்காக நடந்து முடிந்தால், எனக்கு ஏற்படுவது - திருப்தி உங்கள் காரியம் கெட்டுக்குட்டிச்சுவராகப் போனால், எனக்கு ஏற்படுவது - ஆத்ம திருப்தி.
கே; ஆயிரம்தான் பெண்களைக் குறை கூறினாலும். சோ மிகவும் நல்லவர் பெண்களின் மீது மிகுந்தமதிப்பு வைத்திருப்பவர் எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கதரிசி - என்று என் மனைவி உங்களைக்ப்புகழ்ந்து கூறுகிறாள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
ப: இப்போது புரிகிறதா ? இவர்கள் எப்பேர்ப்பட்ட பொய்களையும் சொல்வார்கள் என்பது தெளிவாகிறதா?
கே: நீங்கள் தேர்தலில் நின்றால் எத்தனை ஓட்டுக்கள் வாங்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
ப: எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது.
கே: இந்த நாட்டில் நீங்கள் மட்டும் தனியாக நேர்மை நேர்மை என்று எழுதுவதையும், பேசுவதையும்பார்க்கும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது?
ப: சரி, அனுதாப ஓட்டாவது கிடைக்கட்டுமே!
கே: அரசியல் வாதியுடன் நட்பு எந்த அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்?
ப: அழைத்தால் பாருங்கள், கேட்டால் சொல்லுங்கள், மாறினால் விலகுங்கள்.
கே:பா. ஜ.க. சர்க்கஸில் ம.தி.மு.க. குரங்கு வேஷமும், தி.மு.க. புலி வேஷமும் போட்டு வித்தை காட்டிவருகின்றன - என்கிறாரே காளிமுத்து?
ப:இதெல்லாம் பிரச்சனை அல்ல. பா.ஜ.க. எருமை மாட்டு வேஷம் போட்டு, எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டிருக்கிறதே - அதுதான் பிரச்சனை.