தமிழகத்தில் இன்று
மாத இறுதியில் -பிள்ஸ் டூ தேர்வு முடிவுகள்
சென்னை:
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இம்மாதம் 31 ம் தேதி வெளியிடப்படுகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அடுத்தஇரு வாரங்களில் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் கவுரி சங்கர் தெரிவித்தார்.
ப்ளஸ்டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி துவங்கி 25 ம் தேதி முடிவடைந்தது. 3 லட்சத்து 47 ஆயிரத்து 255மாணவ மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 27 ம் தேதி துவங்கி ஏப்ரல் 7 ம் தேதி முடிவடைந்தது. 5 லட்சத்து 75 ஆயிரத்து144 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 பேர் தனித்தேர்வுகளில் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பிடும் பணியை புறக்கணித்ததால்விடைத்தாள் மதிப்பிடும்பணி இவ்வாண்டில் தாமதாக துவங்கியது. எனினும் பொதுத்தேர்வு முடிவுகளைவிரைவாக அறிவிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இம்மாதம் 31 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளும் அது வெளியான இரு வாரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வுமுடிவுகளும் வெளியிடப்படும் என்றார் அவர்.