தமிழகத்தில் இன்று
ரெடி-மேட் பட்டாடைகளுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ள நி-லை-யில் இந்தியாவிலும் பெரும் வரவேற்புஏற்பட்டுள்ளது.
இதற்கேற்ப ரெடி-மேட் பட்டாடைகளை தயார் செய்யவும், பட்டு உற்பத்தியை மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது என ஜவுளித் துறை அமைச்சக இணைச் செயலர் தெ-ரிவித்துள்ளார். திருப்பூரில் -முதல் -முறையாக பட்டு நூலைப்பயன்படுத்தி -ரெ-டி--மட் ஆயத்த ஆடைகள் தயாரிப்பதற்கான துவக்க நகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சக இணைச் செயலர் திங்ரா கலந்து கொண்டு பேசியதாவது:
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வெளி மார்க்கெட்டில் பட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தாராளமயமாக்கப்படும்.அப்போது இந்திய ரெடி-மேட் பட்டாடைகள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நலை உருவாகும். இந்தியாவின் பட்டுஉற்பத்தி 10 ஆயிரம் டன்களாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், தேவையோ 15 ஆயிரம் டன்களாக உள்ளது.
இந்த தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சீனா போன்ற நாடுகளில் பட்டுஉற்பத்தி அதிகம் இருந்தபோதிலும் அங்கு பயன்பாடு குறைவாகவே இருந்து வருகிறது.
இதனால் அந்-நாட்டின் பட்டு ஏற்றுமதி -நன்றாகவே உள்ளது. இந்திய -ரெ-டி-மேட் பட்டாடைகள் வெளிநாடுகளில், குறிப்பாகஅமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டு சற்று தரம்குறைந்ததாகவே உள்ளது.
எனவே உற்பத்தி செய்யப்படும் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சோதனை-முறையில் இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளது. விரைவில்
இந்த புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தியாளர்களுக்கு விரைவில் அளிக்கப்படும்.
இவ்வாறு திங்ரா கூறினர்.
பின்னர் -நிருபர்களிடம் பேசிய கர்-நாடக மாநல பேராசி-ரியர் விஜயகுமார் கூறியதாவது: பருத்தியிலான ரெடிமேட் ஆடைகளைக்காட்டிலும் பட்டினால் ஆன ரெடிமேட் ஆடைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆயத்தஆடைகளை உற்பத்தியில் செய்வதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஆடைகளை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். அப்போது தான் அதிகளவு அந்நியச்செலாவணியை ஈட்ட -முடியும் என்-றார்.
கோவை பட்டு வளர்ச்சித் துறை உதவி டைரக்டர் தேவசகாயம் கூறுகையில், கோவை பட்டு வளர்ச்சித் துறைக்கு தற்போது இரண்டுடன் பட்டுக் கூடுகள் மட்டுமே வருகிறது. இதனை 10 டன்களாக உயர்த்த தேவையான உதவிகளை விவசாயிகளுக்கு செய்துவருகிறோம் என்றார்.