தமிழகத்தில் இன்று
ரெடி-மேட் பட்டாடைகளுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ள நி-லை-யில் இந்தியாவிலும் பெரும் வரவேற்புஏற்பட்டுள்ளது.
இதற்கேற்ப ரெடி-மேட் பட்டாடைகளை தயார் செய்யவும், பட்டு உற்பத்தியை மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது என ஜவுளித் துறை அமைச்சக இணைச் செயலர் தெ-ரிவித்துள்ளார். திருப்பூரில் -முதல் -முறையாக பட்டு நூலைப்பயன்படுத்தி -ரெ-டி--மட் ஆயத்த ஆடைகள் தயாரிப்பதற்கான துவக்க நகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சக இணைச் செயலர் திங்ரா கலந்து கொண்டு பேசியதாவது:
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வெளி மார்க்கெட்டில் பட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தாராளமயமாக்கப்படும்.அப்போது இந்திய ரெடி-மேட் பட்டாடைகள் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நலை உருவாகும். இந்தியாவின் பட்டுஉற்பத்தி 10 ஆயிரம் டன்களாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், தேவையோ 15 ஆயிரம் டன்களாக உள்ளது.
இந்த தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சீனா போன்ற நாடுகளில் பட்டுஉற்பத்தி அதிகம் இருந்தபோதிலும் அங்கு பயன்பாடு குறைவாகவே இருந்து வருகிறது.
இதனால் அந்-நாட்டின் பட்டு ஏற்றுமதி -நன்றாகவே உள்ளது. இந்திய -ரெ-டி-மேட் பட்டாடைகள் வெளிநாடுகளில், குறிப்பாகஅமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டு சற்று தரம்குறைந்ததாகவே உள்ளது.
எனவே உற்பத்தி செய்யப்படும் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சோதனை-முறையில் இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளது. விரைவில்
இந்த புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தியாளர்களுக்கு விரைவில் அளிக்கப்படும்.
இவ்வாறு திங்ரா கூறினர்.
பின்னர் -நிருபர்களிடம் பேசிய கர்-நாடக மாநல பேராசி-ரியர் விஜயகுமார் கூறியதாவது: பருத்தியிலான ரெடிமேட் ஆடைகளைக்காட்டிலும் பட்டினால் ஆன ரெடிமேட் ஆடைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆயத்தஆடைகளை உற்பத்தியில் செய்வதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த ஆடைகளை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் மேம்படுத்த வேண்டும். அப்போது தான் அதிகளவு அந்நியச்செலாவணியை ஈட்ட -முடியும் என்-றார்.
கோவை பட்டு வளர்ச்சித் துறை உதவி டைரக்டர் தேவசகாயம் கூறுகையில், கோவை பட்டு வளர்ச்சித் துறைக்கு தற்போது இரண்டுடன் பட்டுக் கூடுகள் மட்டுமே வருகிறது. இதனை 10 டன்களாக உயர்த்த தேவையான உதவிகளை விவசாயிகளுக்கு செய்துவருகிறோம் என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications