தமிழகத்தில் இன்று
48வ-து பிறந்-த- நாளில் 48 தி-ரு-ம-ணங்-கள் நடத்-தி வைத்-த மு-.க.ஸ்டா-லின்
கோவை:
சென்னை மேயர் மு.க ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு -நற்று கோவையில் திருமணம் செய்து வைத்தார்.
பல்வேறு திருமண நகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு நேற்று சென்னை மேயர் -மு.க ஸ்டாலின்வந்திருந்தார்.
கட்சி பிரகர்களின் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு அவர், 48 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தார். மணமக்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், சட்டசபை பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஸ்டாலின், தி.மு.க-வினர் ஏழை, எளிய மக்களின் -நலனுக்காக பாடுபட வேண்டும். இவர்களுக்குரத்ததானம் செய்தல், தையல் இயந்திரம் வழங்குதல், ஊனற்றோருக்கு சக்கர வாகனங்கள் வழங்குதல் உட்படபல்வேறு -நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஸ்டாலினின் 48 வது பிறந்த நாள் கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.