கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற மாட்டோம்: இலங்கை ராணுவம் அறிவிப்-பு
கொழும்பு:
யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவ வீரர்களை அப்புறப்படுத்தத் தேவையில்லை என்று இலங்கை ராணுவ தளபதி ஸ்ரீலால் வீரசூரியா கூறியுள்ளார்.
தனியார் தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யாழ்ப்பாணத்தில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவ வீரர்களை வெளியேற்றத்தேவையில்லை. அதற்கான காரணமும் இல்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை வீரர்களை வெளியேற்றுவது குறித்து உலகமே கவலை கொண்டுள்ளது. ஆனால் அதற்கான காரணமே இல்லை. எனவேநாங்கள் அதுகுறித்துக் கவலைப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் போராடி வரும் ராணுவ வீரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நிலை ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏப்ரல் மாதம் யானை இறவுப் பகுதியில் நடந்த மோதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் 400 பேர் வரை இறந்தனர். அவர்களை எதிர்த்து ராணுவம்கடுமையாக தாக்குதல் நடத்தியது.
கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் இழப்பு நேரிட்டுள்ளது. ஒரே நாளில் 116 புலிகளை ராணுவம் கொன்றது. 224 விடுதலைப் புலிகள்காயமடைந்தனர்.
ராணுவத்தரப்பில காயமடைந்த 80 சதவீதம் பேர் அடுத்த ஐந்து மாதத்தில் போர்க்களம் செல்ல தயாராகி விடுவார்கள். தொடர்ந்து பல பகுதிகளில்விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
யு.என்.ஐ.