தமிழகத்தில் இன்று
வடக்கு யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை: 14 புலிகள் பலி
கொழும்பு:
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும்,புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 14 புலிகள் கொல்லப்பட்டதாகஇலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரமாக இலங்கையின் வடபகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடும்சண்டை நடந்து வருகிறது.
கரடியக்காடு என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தபுலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 8 புலிகள்இறந்தனர். அதே பகுதியில் மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் 3 புலிகள்கொல்லப்பட்டனர்.
வேம்போக்குகேர்ணி என்ற இடத்தில் பதுங்கியிருந்த புலிகள் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் 3 பேர் இறந்தனர் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், மட்டக்களப்பு பகுதியில் பணம் கொடுக்க மறுத்த 3 பேரை புலிகள்கடத்திச் சென்றுவிட்டதாகவும், உள்ளூர் மீனவர்களின் 3 படகுகளையும் எடுத்துச்சென்றுவிட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications