முகத்தில் தெளித்த சாரல்...
பிஜியின் வழியில் சாலமன் தீவுகள்...
கான்பெர்ரா:
சாலமன் தீவுகளில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், ஆட்சியைப் பிடித்துள்ளனர். பிரதமர்வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தலைநகர் ஹோனியரா, தீவிரவாதிகள் பிடியில்உள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மலதியன் ஈகிள்ஸ் என்ற பெயர் கொண்ட அந்த தீவிரவாதிகள் அமைப்பு, திங்கள்கிழமைஅதிகாலை, பயங்கர ஆயுதங்களுடன் தலைநகர் ஹோனியராவுக்குச் சென்றது.தலைநகரிலுள்ள அரசின் பல்வேறு நிறுவனங்களை அவர்கள் ஆயுத முனையில்கைப்பற்றினர்.
தலைநகரிலுள்ள தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.தலைநகர் ஹோனியரா இப்போது தீவிரவாதிகள் வசம் வந்து விட்டதாக தெரிவதாகவும்,பிரதமர் பார்த்தோலோமேயூ உலுபா ஆலு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய வானொலிச் செய்தியில், தலைநகர் ஹோனியராவில் ஆயுதம் தாங்கியதீவிரவாதிகள் ரோந்து சுற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாலமன் தீவுகளில் உள்ள குடல்கனால் மற்றும் மாலதியா ஆகிய இரு தீவுகளில் உள்ளதீவிரவாதிகளுக்கிடையே, கடந்த 18 மாதமாக மோதல் இருந்து வருகிறது. இவர்கள் நம்ஊர் பேட்டை ரெளடிகள் போல. இந்தத் தீவிரவாதிகளுக்கு இஸ்தாபு புரட்சிகர முன்னணிமற்றும் மாலதியா ஈகிள்ஸ் என்று பெயர். இவர்களது மோதலில் இதுவரை 60 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
பிரதமர் ராஜினாமா செய்ய கோரிக்கை:
சாலமன் தீவுகளில் ஆட்சியைப் பிடித்துள்ள மாலதியா ஈகிள்ஸ் தீவிரவாதிகள், பிரதமர்உலுபா ஆலு பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில்,தலைநகர் ஹோனியரா தீவிரவாதிகள் வசம் உள்ளது. தீவிரவாதிகளின் தலைவர் ஆண்ட்ரூநோரி, பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சாலமன் தீவுகளின் தலையெழுத்து குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாத நிலைஉள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இதுகுறித்து தெரிய வரலாம்.
காவல் நிலையங்கள், தொலைத் தொடர்பு மையம் ஆகியவற்றை தீவிரவாதிகள்கைப்பற்றியுள்ளனர் என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவுக்கு வட கிழக்கில் 1800 கிலோமீட்டர் தொலைவில் கடலில் உள்ளதுசாலமன் தீவு. இதே தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜித் தீவில் சமீபத்தில்தான் புரட்சிநடந்து, அங்கு ஒரே குழப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications