Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பிளாட்-பார்மி-லி-ருந்-து அன்-ப--ர-சு வீட்-டுக்கு...தமி-ழ-க -காங்-கி-ரசின் பரி-தா-பம்

சென்னை:

பத-வி போன வேகத்-தில் கோ-பத்-தோ-டு கட்-சி அ-லு-வ-ல-கத்-தை-யும் திண்-டி-வ-னம்ராம-மூர்த்-தி காலி- செய்--து-விட்-டதால் தமி-ழ-க காங்-கி-ரஸ் அ-லு-வ-ல-கம் இல்-லா-மல்ரோட்-டில் (பிளாட்-பார்-மில்) நின்-றுள்-ள-து.

இதை-ய-டுத்-து கட்-சிக்-கு அடைக்-க-லம் தர முன்--னாள் எம்.-பி. அன்-ப-ர-சு முன்-வந்--துள்ளா-ர்.-கட்-சி இனி அவ-ர-து- வீட்-டி--லி-ருந்-து இயங்-கும்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து அக் கட்சியில் உள்ளமூன்று கோஷ்டிகளும் ஒன்று சேர்ந்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஏற்பாடுகளைதிண்டிவனம் ராமமூர்த்தி, தங்க பாலு, குமரி அனந்தன் ஆகியோர் செய்துவருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே மூன்று கோஷ்டிகள் உண்டு. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு,குமரிஅனந்தன், பிரபு ஆகியோர் தலைமையில் இக் கோஷ்டிகள் தனித் தனியாக இயங்கி வருகின்றன.மாநிலத் தலைவர் என்ற முறையில் திண்டிவனம் ராமமூர்த்தியும், அவரது ஆதரவாளர்களும் தனியாகஇயங்கி வந்தனர்.

இந்த நான்கு தலைவர்களின் ஆதரவாளர்கள் தான் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக இருக்கின்றனர்.ஆனாலும், அவர்கள் அனைவரும் மாநிலத் தலைவருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. தங்களின் கோஷ்டித்தலைவரின் சொல்லுக்குத்தான் கட்டுப் பட்டு வந்தனர்.

இப்போது மாநிலத் தலைமை பதவியை பறித்து திண்டிவனம் ராமமூர்த்தியை நீக்கி விட்டதால்,அவரது தலைமையில் இருந்த ஆதரவாளர்கள் தனிக் கோஷ்டியாக செயல்பட முடிவு செய்துள்ளனர்.அதனால் கட்சியில் கோஷ்டிகளின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கோஷ்டிகளில் பிரபு ஆதரவாளர்களை தவிர மற்றவர்களிடம் புதிய தலைவர்நியமனத்தில் அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தியை பதவி பறி போன வேகத்தில் திண்டிவனம்ராமமூர்த்தி பகிரங்கமாக காட்டிவிட்டார். இரவோடு இரவாக கட்சி அலுவவகத்தை காலிசெய்து, அலுவலகம் இல்லாத கட்சியாக நூறு வயதை கடந்த காங்கிரஸ் கட்சியை "கேர் ஆப்பிளாட்பார்ம்" கட்சியாக்கி விட்டார்.

அதோடு நில்லாமல் எந்த கோஷ்டிகளும் ஏற்றுக் கொள்ளாத ஒருவரை தலைவராக நியமித்தமேலிடத்துக்கு கண்டனம் தெரிவிக்கவும் , புதிய தலைமையோடு எத்தகைய அணுகுமுறையைகையாள்வது என்பது பற்றி ஒருமித்த முடிவெடுக்க மூன்று கோஷ்டிகள் முன் வந்துள்ளன.

தங்கபாலு , குமரிஅனந்தன்,திண்டிவனம் ராமமூர்த்தி ஆகிய மூன்று தலைவர்களும், அவர்களதுஆதரவாளர்களும் சென்னையில் கூடி பேச திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்ட்த்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அநேகமாக வரும்ஞாயிறு அல்லது திங்கள் கிழமையில் இந்தக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் புதிய தலைவராக நியமிக்க்ப்பட்டுள்ள இளங்கோவன் 11ம் தேதி ட்ெல்லியில் இருந்துசென்னை வருகிறார். அவர் பதவியேற்பதற்கு அலுவலகம் கூட தற்போது இல்லை. அதற்கு புதியஅலுவலகம் தேடுவது எளிதான காரியமல்ல என்பதால், முன்னாள் எம்.பி அன்பரசு அலுவலகம்மற்றும் வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. அதையே தற்காலிக காங்கிரஸ் அலுவலகமாகமாற்றலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+