முகத்தில் தெளித்த சாரல்...
ஜெர்மனி உணவுப் பொருள் கண்காட்சியில் இந்திய நிறுவனம் பங்கேற்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
ஜெர்மனியில் வரும் நவம்பர் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் இந்திய நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி வாரியம் பங்கேற்கிறது. இது குறித்து வாரியத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்தன் தம்பி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும், உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் சிறு தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களின் கண்காட்சி ஜெர்மனியில்நடக்கிறது.
இத்தகைய பொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வோர் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கண்காட்சியில் பங்கேற்கலாம்.
உடல் நலம் காக்க உணவுப் பொருட்களில் எந்த வகை பொருட்களைப் பயன்படுத்தலாம், அவற்றின் மருத்துவக் குணங்கள் என்பது பற்றியும் இக்கண்காட்சியில் இடம் பெறுகிறது என்றார் அவர்.