கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
இலங்கையில் திட்டமிட்டபடி பொதுத்தேர்தல்: சந்திரிகா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் இன்னும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடக்கும். இங்கே நடக்கும் போரினால் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என்று அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கூறியுள்ளார்.
கொழும்பில் அதிபர் சந்திரிகா, எதிர்க்கட்சிகள், அங்குள்ள தமிழ்கட்சிகள் ஆகியோருடன் பொதுத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் தனது கட்சித் தலைவர்களிடையே அவர் பேசுகையில், தேர்தல் திட்டமிட்டபடி இன்னும் சில மாதங்களில் நடக்கும். அதில் எவ்வித மாற்றமும்இல்லை. அதனால் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று கூறினார்.
கட்சி வட்டாரத்தில் இதுகுறித்துக் கூறுகையில், தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று அதிபர் சந்திரிகா தெளிவாகக் கூறிவிட்டார். தேர்தல்ஒத்திவைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கே, முதன்மை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதச்சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு தேவையான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
யு.என்.ஐ.