லஞ்சம் வாங்க தூண்டப்பட்டேன் - குரோனியே
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப் டவுன்:கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கத் தூண்டப்பட்டேன். அப்போதுநான் குழப்பமான மனநிலையில் இருந்தேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின்முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே தெரிவித்தார்.மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் அவர்நீக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங்தலைமையில் தனி விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.விசாரணைக் கமிஷன் முன் புதன்கிழமை ஆஜரான குரோனியேவிடம் கேள்விகள்கேட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குரோனியே கூறியதாவது:5 ஆண்டுகளுக்கு முன் என்னை கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் அணுகினர். எனக்குபண ஆசை காட்டி என்னைத் தூண்டினர். சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம்பெற்றதை நினைத்து இப்போது நான் வருந்துகிறேன்.சூதாட்டக்காரர்களிடமிருந்து 5.8 லட்சம் டாலர் லஞ்சமாக வாங்கியிருக்கிறேன்.சூதாட்டக்காரர்கள் என்னிடம் வந்து பேசி ஆசை காட்டியதால் குழப்ப மனநிலையில்லஞ்சம் வாங்கிக் கொள்ள நான் தூண்டப்பட்டேன் என்பதே உண்மை.லஞ்சம் கொடுக்க சூதாட்டக்காரர்கள் முன் வந்தபோது அவர்களை திட்டிஅனுப்பியிருக்கலாமோ என்று இப்போது நான் கருதுகிறேன். ஆனால், அப்போது நான்அவ்வாறு செய்யவில்லை. அப்போது நான் மறுத்திருந்தால் இப்போது எனக்கு இந்தநிலை வந்திருக்காது.சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம் வாங்கியது உண்மை. ஆனால், மேட்ச் பிக்ஸிங்கில்ஒருபோதும் நான் ஈடுபடவில்லை. 1995-ம் ஆண்டு முதல் இதுநாள் வரைகிளிஃப்போர்டு கிரீன் என்ற ஏஜெண்டு மூலம் ஸ்பான்சர்ஷிப் மற்றும்என்டார்ஸ்மென்டுகளுக்காக மட்டும்தான் நான் பணம் பெற்றேன்.1996-ம் ஆண்டு, இந்தியாவில் முகேஷ் குப்தா என்பவரை அசாருதீன் ஒரு ஹோட்டல்அறையில் எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் தன்னை அவர் ஒரு நகைக்கடைஉரிமையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், பின்னர்தான் அவர்மேட்ச் பிக்ஸிங் செய்யும் சூதாட்டக்காரர் என்று தெரிந்தது.தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்காக முகேஷ் குப்தாவிடம் பணம்வாங்கிக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்வதாகக் கூறினேன். அதுதான் நான்செய்த பெரிய தவறு. பணம் வாங்கியது பற்றி அணி வீரர்கள் யாரிடமும்தெரிவிக்கவில்லை. பணத்தை நானே வைத்துக் கொண்டேன். அந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோற்றுவிட்டது.அந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணிசுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதும் தென் ஆப்பிரிக்கா வந்த முகேஷ் குப்தாடர்பன் மற்றும் கேப் டவுனில் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன் அப் போட்டிதொடர்பான தகவல்களைப் கேட்டார் என்றார் குரோனியே.