தமிழகத்தில் இன்று
மாவட்டத் தலைவர்களை மாற்றுகிறார் மூப்பனார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்துள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்.
தமாகா மாவட்டத் தலைவர்கள் பதவியை 50 ஆக உயர்த்தியுள்ள மூப்பனார், அப்பதவிகளில் ஏற்கனவேஇருந்தவர்களை மாற்றி வருகிறார்.புதியவர்களை நயமித்து வருகிறார்.
தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த சி.கே.பெருமாளை மாற்றி விட்டு, தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை மாவட்டத்தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலை மாற்றி விட்டு, ஜோதியை நியமித்துள்ளார் மூப்பனார்.
மத்திய சென்னை மாவட்டத் தலைவராக விஜயன் தொடர்கிறார்.
வேலூர் மேற்கு மாவட்டத் தலைவராக மோகன்ராஜ், திருச்சி வடக்கு மாவட்டத் தலைவராக செந்தில்வேல், திருச்சி தெற்கு மாவட்டத்தலைவராக கொட்டப்பட்டு சண்கம் ஆகியோரை அவர் நியமித்துள்ளார்.