தமிழகத்தில் இன்று
தொலைத்தொடர்புத் துறையில் 1.67 லட்சம் கோடி ரூபாய் மு-த-லீ-டு தேவை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
2005-ம் ஆண்டில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.1.67 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று மத்தியதகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய வர்த்தகக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
2005-ம் ஆண்டு வாக்கில் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு ரூ.1.67 லட்சம் கோடிதேவைப்படும். இது 2010-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயரும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், தாராளமயமாக்கல் கொள்கையும் அதிக அளவில்முதலீட்டுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி உள்ளன. தற்போதைய காலகட்டத்தில் தொலைத் தொடர்புத் துறைவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆகவே, அந்த வளர்ச்சிக்கு ஈடான தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறையநிதி தேவைப்படுகிறது.
குறிப்பாக தொலைத் தொடர்புத் துறையில் பொருட்கள் உற்பத்திப் பிரிவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.முதலீடுகளும் அதற்குத் தான் நிறைய தேவைப்படுகிறது. தொலைத் தொடர்புத் துறையை விரிவுபடுத்துவதுதொடர்பாக ஆலோசனை கமிட்டியும், வெளிநாட்டு இந்தியர்களுக்கான ஆலோசனை கமிட்டியும் விரைவில்அமைக்கப்படும். இந்த இரு கமிட்டிகளும் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடுகளுக்கு உள்ள வாய்ப்புகள்குறித்து தேவையான நேரத்தில் ஆலோசனை வழங்கும்.
தொலைத் தொடர்புத் துறை நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையையும், செயல்திறனையும் தொடர்ந்துநிலைநாட்ட ஒரு கமிட்டியும் விரைவில் நியமிக்கப்படும். இந்திய தொலைத் தொடர்புத் துறையைநவீனப்படுத்தவும், விரிவாக்கவும் இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்கள் முன் வரவேண்டும் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.