தமிழகத்தில் இன்று
ஜெ-சசி கோர்ட்-டில் ஆஜர்: ஏ.ஆர்.ரஹ்மான் -நாளை சாட்சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அதிமுக ஆட்சிக் கால ஊழல்களை விசாரித்து வரும் மூன்றாவது தனி நீதிமன்றத்தில் டான்சி நிலபேர வழக்கிற்காக ஜெயலலிதாவும், சசிகலாவும்வெள்ளிக் கிழமை ஆஜராகின்றனர். அதே நாளில் முதலாவது தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சிசொல்வதற்காக இளம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆஜராகிறார்.
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஆட்சியில் இருந்தபோது அடிமாட்டு விலைக்கு வாங்கினார் ஜெயலலிதா. இதனால் அரசுக்கு 4.15 கோடி ரூபாய்இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை மூன்றாவது தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு ஆஜராகி வாக்குலம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலாவுக்கு நீதிபதி அன்பழகன்ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால், பகல் 12 மணிக்கு பதிலாக 2 மணிக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலா தரப்புவக்கீல்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.
அதை அவர் நிராகரித்ததோடு, கண்டிப்பாக பகல் 12ம் மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாார்.
அதன்படி வெள்ளிக் கிழமை பகல் 12 மணிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் மூன்றாவது தனி நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.
அதே நேரத்தில் முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சி செல்வதற்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்,மாண்டலின் சீனிவாஸ் ஆகியோர் ஆஜராகி சாட்சியம் அளிக்கின்றனர்.
ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.5 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியதாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்ஆகியோர் மீது ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் விசாரித்து வருகிறார். தற்போது இவ்வழக்கில் முன்னாள் வளர்ப்பு மகன் திருமணத்திற்குஜெயலலிதா, சசிகலா செய்த செலவு விவரங்கள் பற்றி நீதிபதி விசாரித்து வருகிறார்.
அதுதொடர்பாக சாட்சியம் அளிக்கும்படி கல்யாணத்திற்கு பந்தல் போட்டவரிலிருந்து, பாட்டு பாடியவர்கள் வரை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சுதாகரன் திருமண வரவேற்பு நகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடத்தியவர்கள் என்ற முறையில் ஏ.ஆர்.ரகுமானும், மாண்டலின் சீனிவாசும் இன்று சாட்சியம்அளிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications