தமிழகத்தில் இன்று
அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்ட காங். தொண்டர்களுக்கு அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்ட காங்கிரஸ்தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகளின் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று அறிவித்து அந்தஇயக்கத்தை தடை செய்த மத்திய உள் துறை அமைச்சர் அத்வானி, புலிகளைஆதரிக்கும் ம.திமு.க மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்ப்புதெரிவித்தோம். மீறி வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்றோம்.
காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி, தமிழகத்தின் பிரபாகரன் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் வைகோவின் மாநாட்டிற்கு அத்வானி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் தன்முழு எதிர்ப்பையும் காட்டியாக வேண்டும்.
வன்முறைக்கு இந்திரா, ராஜீவ் போன்ற தலைவர்களை இழந்தவர்கள்காங்கிரஸ்காரர்கள் தான். தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மனித நேயத்திற்கும்,வன்முறை ஒழிப்பிற்கும் காங்கிரஸ்காரர்கள் தான் உரிமை பெற்றவர்கள். அந்தவகையில் அத்வானி பங்கேற்பை எதிர்ப்பதும் காங்கிரஸ்காரர்களின் கடமை.
எனவே ஈரோடு வரும் அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்ட காங்கிரசார் திரண்டு வரவேண்டும். எழுச்சியோடு இந்த கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும் என்றுகூறியுள்ளார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications