தமிழகத்தில் இன்று
கடலூரில் பாட்டா-ளி மக்கள் கட்சி அலுவலகத்திற்கு தீவைப்பு
கடலூர்:
சிதம்பரம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் இயகத்தினருக்கும் வன்னியர்களுக்கும் இடையே கடந்த 23-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்தமோதல் வன்முறையாகி வீடுகளுக்கு தீவைப்பு , மோட்டார் கொட்டகைகள் எரிப்பு பஸ் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால் இருவகுப்பினருக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 27 -ம் தேதி வன்முறை குறைந்து அமைதி ஏற்பட்டது. நேற்று மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் நகர பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகம் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தஅலுவலகத்தை வன்முறை கும்பல் ஒன்று தீவைத்து கொளுத்தியது. இதில் அலுவலகம் சாம்பலானது. அப்பொழுது அருகே உள்ள பாஸ்கரன் என்பவருடையவிறகு கடையும் எரிந்து சாம்பலானது. இதில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
பா.ம.க அலுவலகம் எரிக்கப்பட்டதை கண்டித்து அந்த பகுதியில் பொதுமக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்துமாற்றி விடப்பட்டது. அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அங்கே கலவரத் தீ அடங்கவில்லை.