For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை

கரூர்:

கரூரில் அ.தி.மு.க கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கரூர் தான்தோணி பேரூராட்சியின் பதினைந்தாவது வார்டுகவுன்சிலராக இருந்தவர் எம்.பி.ஆறுமுகம். இவர் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். தான்தோணி அ.தி.மு.க டவுண் பஞ்சாயத்துமுன்னாள் செயலாளராக இருந்தவர்.

சுக்காலியூர் முத்துக்கவுண்டன் புதூரில் ஆறுமுகம் வசித்து வந்தார்.கரூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள தெற்கு முருகநாதபுரத்தில்சைக்கிள் கடை நடத்தி வந்தார்.

திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கடையைமூடிவிட்டு வீட்டிற்கு செல்ல ஈஸ்வரன் கோயில் பின்புறம் உள்ளவாட்டர் டாங்க் அருகில் உள்ள பாதை வழியாக மொபட்டில்சென்றார்.

அப்பொழுது அங்கு மறைந்திருந்த சிலர் அவரை அரிவாளால்வெட்டிக் கொன்றனர். அவரது கழுத்தின் இருபுறம், கை, மார்பு,ஆகிய பகுதிகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.

தகவல் அறிந்த கரூர் டி.எஸ்.பி ராமச்சந்திரன் உட்பட போலீஸ்அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆறுமுகத்தைவெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

இறந்த ஆறுமுகத்திற்கு அருக்காணி என்ற மனைவியும், உமா,சுகன்யா, சுதா என்ற மூன்று பெண்களும் நவீன் என்ற மகனும்உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X