தமிழகத்தில் இன்று
ஜம்மு-காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தை நிராகரித்தது மத்திய அரசு
டெல்லி:
ஜம்மு- காஷ்மீர் சட்டசபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் அம் மாநில சட்டப்பேரவையில் ஜூன் 26-ம்தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அத் தீர்மானம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து சுயாட்சி தீர்மானம் குறித்து மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை கூடி விவாதித்தது. பிரதமர் வாஜ்பாய் தலைமையில் சுமார் ஒன்றரை மணிநேரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
விவாதத்துக்குப் பிறகு காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தை நிராகரிப்பது என அமைச்சரவை முடிவு செய்தது. இத் தகவலை, கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தெரிவித்தார்.
இம் முடிவு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சுயாட்சி தீர்மானத்தை நிராகரிப்பதுஎன்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில்முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மகாஜன் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி நிருபர்களிடம் பின்னர்தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் துவங்குவதற்கு 15 நிமிடம் முன்பு, பிரதமர் வாஜ்பாயை அவரது வீட்டில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சந்தித்துப்பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.