தமிழகத்தில் இன்று
திருட்டுப் பொருட்களை திருடிய போலீஸ்காரர்கள் கைது
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டபொருட்களைத் திருடியதாக சப் இன்ஸ்பெக்டர், பெண் காவலர் உள்பட மூன்றுபோலீஸார் கைது செய்யப்பட்டனர்.
மஹிதார்புரா காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் ரட்டன் சிங் ராம் சிங் பர்மார். இந்தக்காவல் நிலையத்தின் ஸ்டோர் ரூமில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட
ரூ. 21.87 லட்சம் மதிப்புள்ள நகை,மற்றும் பல்வேறு பொருட்கள்வைக்கப்பட்டிருந்தன. அறையின் சாவி பர்மாரிடம் இருந்தது. இவர் உதவி சப்இன்ஸ்பெக்டராக இருந்து வந்தார்.
இவற்றை பர்மார், ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றொரு கான்ஸ்டபிள் ஆகிய மூவரும்சேர்ந்து திருடியதாக மஹிதார்புரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜே.டி.ராமகாதியாமேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து காவல் நிலையத்திலிருந்த அனைவரும் விசாரிக்கப்பட்டனர். இதில்பர்மார், இரண்டு கான்ஸ்டபிள்கள் உதவியுடன் பொருட்களை திருடியது தெரியவந்தது.இதையடுத்து மூவரும் ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்படனர்.
இவர்கள் மீது சதி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ்காவலில் வைக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications