தமிழகத்தில் இன்று
வட இலங்கையில் கடும் சண்டை - 12 புலிகள் சாவு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட கடும்தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கும்,ராணுவத்துக்கும் இடையே கடந்த இரு மாதங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் வட பகுதியில் வெவ்வேறு இடங்களில்இலங்கை ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.
கொழும்புத் துறைப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். 3இலங்கை ராணுவத்தினர் காயமடைந்தனர். தட்டுவான்கோட்டை மற்றும் கரடினகாடுஇடங்களில் நடந்த தாக்குதல்களில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.
கிழக்கு திரிகோணமலையில் இலங்கை ராணுவத்தினர் மீது புலிகள் ராக்கெட் தாக்குதல்நடத்தினர். பதிலுக்கு இலங்கை ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இதில் புலிகள்தரப்பில் 3 பேரும், ராணுவம் தரப்பில் 2 பேரும் இறந்தனர். 6 ராணுவத்தினர்காயமடைந்தனர் என்று இலங்கை அரசு தெரிவித்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications