தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அமிதாப்பா....ராஜ் கபூரா....?

லண்டன்:

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் மெழுகு பொம்மை மியூசியத்தில் வைக்கப்படவுள்ள இந்திய சினிமா நட்சத்திரத்தை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடத்த மியூசியம்முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் ஆசியர்கள் இந்த நட்சத்திரத்தை வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்வர். இதற்காக ஐந்து பேர் கொண்ட பட்டியலை மியூசியம்அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன் இதில் முதலாவதாக உள்ளார். அவருக்கு அடுத்து மாதுரி தீக்ஷித், ராஜ் கபூர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோர்உள்ளனர்.

இந்திய திரை நட்சத்திரத்தின் உருவத்தை மெழுகு பொம்மையாக வடிக்க இந்த ஆண்டின் துவக்கத்தில் துஸ்ஸாத் மியூசியம் முடிவு செய்தது. உலகிலேயே மிகப் பெரியசினிமாத் துறையான இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும் இது.

லண்டனைச் சேர்ந்த ரமேஷ் சந்த் கூறுகையில், எங்களுக்குத் தெரிந்த முகம் அமிதாப் பச்சன் மட்டுமே. பல கோடி ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் அவர்.அவரது உருவ பொம்மை துஸ்ஸாத் மியூசியத்தில் வைக்கப்பட்டால் இந்தித் திரையுலகிற்கு மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிற்கே பெருமை.

உலகிலேயே மிகப் பெரிய திரையுலகான இந்தியாவை துஸ்ஸாத் கெளவரப்படுத்தியிருக்கிறது. இந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த அங்கீகாரம் இது.ஹாலிவுட்டிற்கு எந்த விதத்திலும் இந்தியத் திரையுலகம் குறைந்ததில்லை என்றார் அவர்.

கடந்த 200 வருட கால துஸ்ஸாத் மியூசிய வரலாற்றில் ஒரு உருவ பொம்மை வைப்பதற்காக வாக்கெடுப்பு நடக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றுமியூசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+