For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஆந்திரா அதிரடி சாதனை

ஹைதராபாத்:

சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஆந்திர மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யஅந் மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பாக, ஹைதராபாத் சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் மல்லிகார்ஜுன் ராவ் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் தான் ஆந்திரா நுழைந்தது. இப்போது வெளிநாடுகளுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதில் ஆந்திர மாநிலம்முன்னணியில் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்படும் என்று கருதப்படுகிறது. தேசிய அளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி 50சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் 100 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இது வரும்ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாப்ட்வேரில் 65 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. ஹைதராபாத்தில்தற்போது 900 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. மொத்தம் 25 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். மாதந்தோறும் நூற்றுக்கணக்கானசாப்ட்வேர் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

1991-92-ல் ரூ.2 லட்சமாக இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, 1999-2000-த்தில் ரூ.1,069 கோடியாக உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இது ரூ.2 ஆயிரம்கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சந்திரபாபு நாயுடு அரசு மிகுந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.பல புதிய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தகவல்தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஆந்திர அரசு செய்து தருகிறது என்றார் மல்லிகார்ஜுன ராவ்.

... மேலும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X