தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

திருடனுக்கு "தர்ம அடி" தந்-து சங்கிலியை மீட்ட பெண்

சென்னை:

சென்னையை சுற்றிப் பார்க்க வந்தபோது நகையைப் பறித்த திருடனை ரஜினி ஸ்டைலில் பாய்ந்து உதைத்து தனது நகையை மீட்டார் திருவண்ணாமலையைச் சேர்ந்தகிராமத்துப் பெண்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள ஊசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமலா. 20 வயதாகும் விமலா, ஞாயிற்றுக்கிழமைசென்னையைச் சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக வந்துள்ளார்.

பல இடங்களுக்கும் போனார். இறுதியாக மாலையில், கடற்கரைக்கு வந்தார். எம்.ஜி.ஆர்.சமாதி, மெரீனா பீச், எம்.ஜி.ஆர்.சமாதி என வரிசையாகபார்த்துக் கொண்டு வந்தார். சுற்றிப் பார்த்த களைப்புடன் ஊருக்குச் செல்ல பஸ்ஸுக்குக் காத்திருந்தார்.

கிராமத்துத் தோற்றத்தில் விமலா இருந்ததால் அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை அபேஸ் செய்யும் நோக்கத்துடன் ஒரு நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார்.விமலா அசந்து நின்ற நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்ட அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓடினார்.

திகைத்துப் போன விமலா உடனடியாக சுதாரித்துக் கொண்டார். திருடனைத் துரத்தினார். அருகில் நெருங்கியதும், பறந்து சென்று அவரது இடுப்பில் ஒரு உதைவிட்டார். நிலைகுலைந்த சங்கிலியைப் பறித்த நபர் தரையில் விழுந்தார். திருடனிடமிருந்து நகையை மீட்டுக் கொண்டு செம்மையாகவும் உதைத்தார். நிலையைஉணர்ந்த பொதுமக்களும் கூடினர். அதற்குப் பிறகு தர்ம அடிதான்.

பிறகு திருடனை, விமலா போலீஸில் ஒப்படைத்தார். விமலாவின் வீரச் செயலை நகர போலீஸ் கமிஷனர் காளிமுத்துப் பாராட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+