பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது

Subscribe to Oneindia Tamil

கொழும்புத்துறை, நாகர்கோவிலை பிடித்தது ராணுவம்; 50 புலிகள் பலி

கொழும்பு:

யாழ்ப்பாண தீபகற்பத்தில் கொழும்புத்துறை, நாகர்கோவிலை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. அப்போது நடந்தசண்டையில் விடுதலைப் புலிகள் 50 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பலிதா பெர்னான்டோ புதன்கிழமை கூறியதாவது:

இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் நிலைகள் மீது தாக்குதல்நடத்தி ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்.

நாகர்கோயில் மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடந்த சண்டையில் புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட புலிகள் பலியானார்கள். புலிகளின் நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாண நகருக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப் பகுதிகளை ராணுவம் பிடித்துள்ளது. தற்போது அங்கு தங்களது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார் பெர்னான்டோ.

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 23 புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதால் மீட்புப் பணிபாதிக்கப்பட்டுள்ளது என்று தலைமை சென்சார் அதிகாரி ஆரிய ரூபசிங்கே தெரிவித்தார்.

புலிகளுடன் நடந்த சண்டையில் 2 ராணுவத்தினர் இறந்துவிட்டதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

நாகர்கோயில் மற்றும் கொழும்புத்துறையில் நடந்த சண்டை குறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+