தமிழகத்தில் இன்று
பெட்ரோல் கலப்படத்தைத் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி:
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் மத்திய அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
நாப்தா மீதான கட்டுப்பாடு, பெட்ரோலில் கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளைஅமல்படுத்துவது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்தும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக், நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களில்கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன. மேலும், இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளும், யூனியன்பிரதேச அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
1999, ஜனவரி முதல் தேதி வரை சமையல் எரிவாயு இணைப்புக் கேட்டுக் காத்திருப்பவர்களுக்கு நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இணைப்புத் தரப்பட்டுவிடும்.
மக்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் சமையல் எரிவாயு கிடைக்க, எரிவாயு சிலிண்டர்களை இருப்பில் வைத்துக் கொள்ள போதுமானகிடங்குகளைக் கட்ட வசதி செய்து தரும்படி அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அது தவிர, புதிய ஏஜென்சிகளை திறக்கும்படியும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.