தமிழகத்தில் இன்று
பெட்ரோல் கலப்படத்தைத் தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி:
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் மத்திய அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
நாப்தா மீதான கட்டுப்பாடு, பெட்ரோலில் கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளைஅமல்படுத்துவது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்தும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக், நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களில்கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன. மேலும், இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளும், யூனியன்பிரதேச அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
1999, ஜனவரி முதல் தேதி வரை சமையல் எரிவாயு இணைப்புக் கேட்டுக் காத்திருப்பவர்களுக்கு நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இணைப்புத் தரப்பட்டுவிடும்.
மக்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் சமையல் எரிவாயு கிடைக்க, எரிவாயு சிலிண்டர்களை இருப்பில் வைத்துக் கொள்ள போதுமானகிடங்குகளைக் கட்ட வசதி செய்து தரும்படி அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அது தவிர, புதிய ஏஜென்சிகளை திறக்கும்படியும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications