தமிழகத்தில் இன்று
தூத்துக்குடி கடலில் மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி:
இந்திய எல்லையில் சட்ட விரோதமாக மீன் பிடித்த 10 இலங்கை மீனவர்களை இந்தியகடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை வருவதைத் தொடர்ந்து இந்திய கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று இந்திய கடல் எல்லைக்கு 7 கடல் மைல் தொலைவில்சந்தேகத்திற்கிடமான வகையில் 10 மீனவர்கள் மீன் பிடிப்பதைக் கண்ட இந்தியக்கடற்படையினர் அவர்களை கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் மீன் பிடிப்பதற்காக வந்ததாகவும்தெரியவந்தது.அவர்களிடம் அந்த பகுதியில் மீன் பிடிப்பதற்கான அனுமதியோஅடையாள அட்டையோ இல்லை.
இதைத் தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாககடலோர காவல் படையின் கமாண்டிங் அதிகாரி கே.எஸ்.ஷெரன் நிருபர்களிடம்தெரிவித்தார். மீனவர்களிடமிருந்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications