தமிழகத்தில் இன்று
புலிகள் மர்ம சாவு: ஜூலை 15-ல் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா மாநிலம் நந்தகனான் விலங்கியல் பூங்காவில் மர்மமான முறையில் 12 புலிகள் இறந்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மத்திய நிபுணர் குழுவின்அறிக்கை ஜூலை 15-ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விலங்கியல் பூங்கா ஆணையக செயலாளர் பி.ஆர்.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு வெள்ளிக்கிழமை தனது விசாரணையைத் துவக்கியது. ஒரிஸ்ஸாமுதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கையின்பேரில் இந்தக் குழுவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் நியமித்துள்ளது.
விசாரைணக் குழுவின் அறிக்கை ஜூலை 15-ம் தேதிக்குள் மத்தய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷம் கலந்த மருந்து கொடுக்கப்பட்டதால்தான் புலிகள் இறந்ததாகத் தெரிவதாக ஏற்கனவே சர்வதேச நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications