For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஆந்திர புயல் சின்னம் பலவீனமடைந்தது

ஹைதராபாத்:

ஆந்திரா அருகே கடந்த மூன்று தினங்களாக வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த குறைவு மண்டலம் பலவீனம் அடைந்தது. இதனால்ஆந்திராவிற்கு வந்த புயல் அபாயம் நீங்கியது.

தெலுங்கானா பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், மேடக், மெகபூப் நகர்,கம்மம், வாரங்கல் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கடும் மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.

மெகபூப் நகர் மாவட்டம் ஜுராலா பகுதியில் அதிகபட்சமாக 13 செமீ மழை பொழிந்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X