தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
நவாஸ் ஷெரீப் மனைவி விடுதலை
லாகூர்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஞாயிற்றுக்கிழமைவிடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் தலைமையிலான ராணுவ ஆட்சியைக் கண்டித்து லாகூரில் பேரணி நடந்த முயன்றார் குல்சூம். ஆனால், அதற்கு போலீஸார்அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், தடையை மீறு சனிக்கிழமை பேரணி நடத்த முயன்றதை அடுத்து குல்சூம் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட அவரை விடுதலை செய்யும்படி லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் வீட்டுக்குஅழைத்துச் சென்று விடப்பட்டார். அவருடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர்களும் உடன் வந்தனர்.












Click it and Unblock the Notifications