For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

வங்கதேசத்தில் 6 மாணவர்கள் சுட்டுக் கொலை

டாக்கா:

வங்கதேச ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் மாணவர் அணியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சிலரால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிட்டகாங்க் நகரில் இந்த சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்கள் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமியின் மாணவர் பிரிவான,இஸ்லாமிக் மாணவர் படையைச் சேர்ந்த சிலர் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முதலில் பஸ்சின் டயரை அவர்கள் பஞ்சர் செய்தனர். அதன் பிறகு பஸ்சுக்குள் புகுந்து, துப்பாக்கிகளால் சரமாரியாகக் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்திய எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு:

இதற்கிடையே, இந்திய, வங்கதேச எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் உள்ள வங்கதேச கிராமங்களில் இருந்து, வங்கதேச ராணுவ வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக சரமாரியாகச் சுட்டு வருவதால்,இந்தியா தனது எல்லைப் பகுதியில் கூடுதல் படைகளை குவித்துள்ளது.

மூன்று வங்கதேச ஊடுறுவல்காரர்களை, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றதையடுத்து, வங்கதேச வீரர்கள் துப்பாக்கிகளால்சுட்டு வருகின்றனர். மேகாலயா எல்லைக் கிராமமான ரங்க்டில்லா முக்தாபூரில் இந்த சம்பவம் நடந்தது.

தற்போது எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதிக்க இரு தரப்பு எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கூட்டம் வியாழக்கிழமைநடக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.ஞணூ>

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X