For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஆக. 22-ல் துவங்கும் ஆசியாவின் மிக நீண்ட மத யாத்திரை

கார்வால் (உத்தரபிரதேசம்):

ஆசியாவின் மிக நீண்ட யாத்திரை என்று கூறப்படும், நந்தாதேவி ரஜாத் யாத்திரைஇந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி துவங்குகிறது.

9-வது நூற்றாண்டிலிருந்து நந்தா தேவி ரஜாத் யாத்திரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைநடை பெற்று வருகிறது. இந்தப் புனித யாத்திரை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம்தேதி துவங்குகிறது.

இது ஆசியாவின் மிக நீண்ட மத யாத்திரையாகும். இந்த யாத்திரையில் 289கிலோமீட்டர் மலைப்பாதையை நடந்தே கடக்க வேண்டும். கார்வால், இந்தியாவின்வடபகுதி மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது.

அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிப்பது போல் இந்த யாத்திரையில் பங்கு பெறும்பக்தர்களுக்கும் விபத்துக் காப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்காக 19 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்க்கரை, மாவு, அரிசிமற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களும் மலைப் பாதையில்அமைக்கப்படடுள்ள தங்குமிடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உத்திரப் பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாயை இந்த யாத்திரைக்காகசெலவிட்டுள்ளது. இதில் 30.8 லட்சம் ரூபாய் சாலை மற்றும் பாலம் அமைக்கும்பணிக்காவும், 20.4 லட்சம் ரூபாய் குடிநீர் வசதிக்காகவும், 6 லட்சம் ரூபாய் மருத்துவவசதிக்காகவும், 7 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மின்சார வசதிக்காகவும்செலவிடப்பட்டுள்ளது.

யாத்திரிகர்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்ய18 மருத்தவ முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள். உதவியாளர்கள் உள்ளிட்ட மூன்று மருத்துவக்குழுக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்பி.எஸ். பாங்டி தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X