தமிழகத்தில் இன்று
கோவை சர்ச்சுகளில் பலத்த பாதுகாப்பு
கோவை:
கோவையில் உள்ள சர்ச்சுகள் மீது எவ்விதத் தாக்குதலும் நடக்காமல் இருக்கத்தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்ச்சுகளுக்கு எவ்விதஅச்சுறுத்தலும் இல்லை என போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள சர்ச்சுகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. மாநிலஅரசின் உத்தரவின் பேரில் சர்ச்சுகள் உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பும்,கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் பீதியோ, அச்சமோகொள்ளத் தேவையில்லை.
கோவையில் குண்டு வைக்கப் போவதாகக் கூறப்படும் தகவல்கள் சரியானவை அல்ல.நாடு ழுவதிலுமே போலீஸ் தலைமை இடங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளார்.