தமிழகத்தில் இன்று
வைகை ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் சாவு
மதுரை:
மதுரையில், வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு மாணவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
காமராஜபுரம், பாரதிநகரைச் சேர்ந்த சில சிறுவர்கள் சனிக்கிழமை ஒபுளா படித்துறை அருகில் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போதுபடித்துறையில் இருந்து ஆற்றுக்குள் குதித்த இருதயராஜ், செந்தில், சதீஷ்குமார் ஆகிய மூவரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.
நீண்ட நேரமாகியும் நீரில் மூழ்கியவர்களைக் காணவில்லை என்பதால் கரையில் நின்றிருந்த மற்ற சிறுவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். அதற்குள்பொதுமக்கள் கூடி விட, பலரும் ஆற்றில் குதித்து சிறுவர்களை தேடினர். கண்டுபிடிக்க முடியாமல் போகவே, தீயணைப்புத் துறையினருக்கும்,காவல்துறையினருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் ஒபுளா படித்துறையில் இருந்து குருவிக்காரன் சாலை பாலம் வரை தேடினர். மாலை வரை தேடி இரண்டு மாணவர்களின் சடலங்களைமீட்டனர். இன்னும் ஒரு மாணவரின் சடலத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இரவாகி விடவே தேடும் பணியை நிறுத்திக் கொண்ட தீயணைப்புத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை தேடும் பணியை மீண்டும் தொடங்கினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications