தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியில் வாக்குமூலம் அளித்த "பல்டி சாட்சிகள்
சென்னை:
சென்னை தனி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்.எம்.பாண்டே மீதானஊழல் வழக்கு விசாரணையில் இருவர் இந்தியில் சாட்சியம் அளித்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்.எம்.பாண்டே மீதான ஊழல் வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் பாண்டே உறவினர்கள் ரேகா, அருண்குமார் கர்க் ஆகிய இருவர் திங்கள்கிழமை இந்தியில் சாட்சியம் அளித்தனர்.
இருவரும் இந்தி மொழியில் அளித்த சாட்சியத்தை நீதிமன்ற அதிகாரி தமிழில் மொழி பெயர்த்தார்.
ஏற்கனவே போலீசில் அளித்த வாக்குமூலத்திற்கு மாறாக இவர்கள் சாட்சியம் அளித்தனர்.அதையடுத்து இந்த இருவரையும் "பல்டி சாட்சிகளாக நீதிபதி பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications