தமிழகத்தில் இன்று
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கராத்தே வீரர் ஹுசைனி
சென்னை:
தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்குச் சம்பளம் தராமல் கொடுமைப்படுத்தியதாக பிரபல கராத்தே வீரர்ஹுசைனியை போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த ஹுசைனி, கராத்தேயில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்திவரும் இவருக்கு, போலீஸாருக்குக் கராத்தே பயிற்சி அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர், "ஹை ப்ரொபைல்" என்ற பெயரில் பாதுகாப்புப் படை நிறுவனம்ஒன்றை நடத்தி வருகிறார்.
இந் நிறுவனத்தில் வேலைக்குச் சேருபவர்களுக்கு மாதம் ரூ. 3,500 சம்பளம் என்றும், மற்ற கராத்தே பயிற்சிகளும்அளிக்கப்படும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து பலர் இந் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
பல நிறுவனங்கள், கம்பெனிகள், பிரபலங்களின் வீடுகள் போன்ற இடங்களில் இந் நிறுவன ஊழியர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர தமிழில் புதுப் படங்கள் வெளியானால், அவற்றின் திருட்டிசிடிக்களைக் கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஹுசைனி சரியாக சம்பளம் கொடுக்காமலும், அவர்களை அடித்து,உதைத்துத் துன்புறுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஹுசைனியைப் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள்சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.